×

திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

அருப்புக்கோட்டை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்து 17 வயது சிறுமி, தாயார் இறந்ததால் தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கிழஉப்பிலிக்குண்டுவில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சிறுமியை, அவரது தாத்தா அழைத்து சென்றார். அப்போது, அதே ஊரை சேர்ந்த பால்பாண்டி (30) என்பவரின் தாயார் சிறுமியை பெண் கேட்டுள்ளார். சிறுமி, மைனர் என்பதால் தாத்தா மறுத்துவிட்டார். தொடர்ந்து சிறுமி, தாத்தாவுடன் ெசாந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து கீழஉப்பிலிக்குண்டுவில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு சிறுமியை பால்பாண்டியின் தாயார் அழைத்துள்ளார். அதை ஏற்று சிறுமியை தாத்தா அனுப்பி வைத்தார். பின்னர் பங்குனி திருவிழா முடிந்து சொந்த ஊருக்கு வந்த சிறுமியை தாத்தா திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தாத்தாவிற்கு செல்போனில் தெரிவித்துள்ளார். உடனே திருப்பூரில் உள்ள பேத்தியை தாத்தா சொந்த ஊருக்கு அழைத்து வந்து விசாரித்தார். பால்பாண்டிதான் திருவிழாவிற்கு அவரது ஊருக்கு சென்றபோது திருமண ஆசைகாட்டி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறுமியை கீழஉப்பிலிக்குண்டுவுக்கு அழைத்து சென்று தனது பேத்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு பால்பாண்டியிடம் கூறியுள்ளார். மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாத்தா, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை இன்று காலை கைது செய்தனர்.

The post திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bokso ,Aruppukkottai ,Beraiyur ,Madurai ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...