புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அரண்மனை திடல் எனும் பகுதியில் 15 குழிகள் கடந்த மே மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. அடுத்த கட்டமாக கோட்டை கரை எனும் இடத்தில் கோட்டையின் கட்டுமானத்தை அறியும் வகையில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 5*5 மீட்டர் அளவில் குழிகள் அமைக்கும் பணியில் தமிழக தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post புதுக்கோட்டை அருகே பொற்பனைக் கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வு பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.