×

மாசுகட்டுபாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: விநாயகர் சிலையை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்வதற்கும் கரைப்பதற்கும் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ரசாயனத்தால் செய்யப்படும் சிலைகள் சரியாக கரைவதில்லை மற்றும் அதனால் மாசு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விநாயகர் சிலையை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, விநாயகர் சிலையை செய்வதற்கு பசுமை தீர்ப்பாயம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post மாசுகட்டுபாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Provinegar ,Pollutants Board ,Court ,Madurai ,Vinayagar ,Green Tribunal ,Shanagar ,Pollutant Disposal Board ,High Court ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...