×

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சென்னை: உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டுதுறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் சென்னை விமானநிலையத்தில் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வரவேற்று பூங்கொத்து வழங்கினர்.

தொடர்ந்து தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவர்கள் மற்றும் அவரது பள்ளி மாணவர்கள் இணைந்து அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்குகின்றனர். இதன் தொடர்சியாக அவரை திறந்தவெளி வாகனம் மூலமாக அழைத்து செல்லப்பட்டார். கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நேரடியாக நேருவிளையாட்டு அரங்கிற்கு அழைத்துச்சென்று அவருக்கு தேர்நீர் விருந்து வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தொடர்ந்து அவர் இன்று மதியம் 12 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார்.

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்றதற்காக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்க திட்டமிடபட்டுள்ளது

The post உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! appeared first on Dinakaran.

Tags : Praggnananda ,World Cup Chess Series ,Chennai Airport ,Chennai ,Tamil Nadu ,Prakhnananda ,Grandmaster ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!