×

துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

துறையூர், ஆக. 30: துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். துறையூர் அருகேயுள்ள கரட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சுபாஷ்சந்திரபோஸ்(43). இவர் நேற்று முன்தினம் இரவு கரட்டாம்பட்டியிலுள்ள ஏடிஎம் செல்வதற்காக திருச்சி ரோட்டை கடந்து சென்றார். அப்போது திருச்சியிலிருந்து துறையூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவருக்கு துறையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thariyaur ,Dharayur ,Karatampatti ,Dariyur ,Dinakaran ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை