×

அம்மாப்பேட்டையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கருப்பு கொடி போராட்டம்

தஞ்சாவூர், ஆக. 30: தஞ்சாவூர், அம்மாப்பேட்டையில் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி காந்தி ஜெயந்தி அன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம், திருநாவுக்கரசு தலைமையில் அம்மாப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் தாமரைச்செல்வி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜாராமன், கோ.பழனிச்சாமி, சின்னராஜா, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், அம்மாப்பேட்டை, புளியக்குடி, மேலத்தோப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரி காந்தி நினைவு நாளில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது, அம்மாப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும், தோப்புதெரு பகுதி மாணவர்களின் நலன் கருதி மதியம் 2 மணியிலிருந்து 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அம்மாப்பேட்டையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கருப்பு கொடி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tasmak store ,Mamapet ,Thanjavur, Va. ,Gandhi Jayanti ,Ammapet, Thanjavur ,Tasmac store ,Mamapad ,Dinakaran ,
× RELATED திண்டிவனத்தில் பொதுமக்களுக்கு...