×

சேந்தமங்கலம் அரசு கல்லூரி மாணவி 3ம் இடம்

சேந்தமங்கலம், ஆக. 30: நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில், சேந்தமங்கலம் அரசு கல்லூரி மாணவி 3ம் இடம்பெற்றார். மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய, நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரியின் 2ம்ஆண்டு தமிழ்த்துறை மாணவி நந்தினி கலந்துகொண்டு, மாவட்ட அளவில் 3ம் இடம்பெற்றார். இதையடுத்து சென்னையில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மேயர் பிரியா, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., ஆகியோர் பரிசுத்தொகை, சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை மாணவி நந்தினிக்கு வழங்கி பாராட்டினர். மாவட்ட அளவில் மூன்றாம் இடம்பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த நந்தினியை, கல்லூரியின் முதல்வர் பாரதி பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கணிதத்துறை தலைவர் செந்தில்குமரன், உடற்கல்வி இயக்குனர் ரவி, தமிழ்த்துறை தலைவர் கலையரசி, துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post சேந்தமங்கலம் அரசு கல்லூரி மாணவி 3ம் இடம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam Government College ,Senthamangalam ,Namakkal ,Sendhamangalam Government College ,Dinakaran ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!