
- பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா
- Senthamangalam
- சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
- பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
சேந்தமங்கலம், ஆக.30: சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் ேகாயில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் மறுக்காப்பு கட்டுதல், அரண்மனை பொங்கல், வடிசோறு பொங்கல், மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா, அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து. அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஜங்களாபுரம் பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஊர்வலமாக அனைத்துவரப்பட்டு கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் மாலையில் மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், பன்னீர் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. குதிரை வாகனத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The post பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.