×

அரவக்குறிச்சியில் அமராவதி கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடி திறக்கப்படுமா?

அரவக்குறிச்சி, ஆக.30: ‘‘அரவக்குறிச்சியில் அமராவதி கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடி திறக்க வேண்டும்,’’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில் அரசு கூட்டுறவு நிலையங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகங்களில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடியில் மக்களுக்குச் சிறப்பான முறையில் சேவை செய்து வருகிறார்கள். அதனைப் போலவே கரூரில் இருக்கும் அமராவதி சிறப்பங்காடியை போல அரவக்குறிச்சியிலும் திறக்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மளிகைப் பொருட்களும், இதர அனைத்து வகையான அன்றடம் உபயோகத்திற்கு தேவையான பொருட்களும் கிடைக்கும். தீபாவளி நேரங்களில் தர மான, சிறப்பான பட்டாசுகளும் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. எனவே அதுபோல் அமராவதி கூட்டுறவு பல் பொருள் சிறப்பங்காடியை தாலுக்கா தலைநகரான அரவக்குறிச்சியிலும் துவக்கி மக்களுக்கு அரசு சிறந்த சேவை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரவக்குறிச்சியில் அமராவதி கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடி திறக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Amravati Cooperative Supermarket ,Aravakurichi ,Amaravati Cooperative Supermarket ,Aravakurichi… ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...