×

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

 

திருப்பூர்,ஆக.30: குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி வன்னியபெருமாள் உத்தரவுப்படி, எஸ்.பி பாலாஜி, டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர், பல்லடம் – தாராபுரம் ரோட்டில் ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மேனகா, எஸ்.ஐ கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் துத்தாரிபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த சங்கரன் (27), விருதுநகரை சேர்ந்த யோகேஸ் (20) என்பதும் அவர்கள் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பகுதியில் தங்கி பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரன், யோகேஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி சென்ற 650 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,DGP ,Vanniaperumal ,Civil Supply Crime Investigation Department ,SB ,Balaji ,DSP ,Sureshkumar ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து...