×

மும்பையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் நுழைந்து விவசாயிகள் போராட்டம்

மும்பை: தொழிற்சாலை அமைக்க கையகபடுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் நுழைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விளை நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அமைச்சர் தாதாஜி பூசே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

பல்வேறு அரசு திட்டங்களுக்காக அரசு தங்களுடைய நிலத்தை எடுத்துகொள்ளும் போது அதற்கு சரியான இழப்பீடு அளிக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறுகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தது. அதில் சரியான முடிவு எட்டபடாத நிலையில், தற்போது மும்பை தலைமை செயலகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post மும்பையில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் நுழைந்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Leadership Secretariat Campus ,Mumbai ,Marathi ,Dinakaran ,
× RELATED “இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக...