×

அரசு பள்ளியில் காலை உணவு நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு பாராட்டு

 

திருப்பூர், ஆக. 29: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் காரிங்கராயன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமையலர் சமைத்த உணவை சாப்பிடாமல் சிலர் புறக்கணித்தனர். மேலும், அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை தரும்படியும் கேட்டனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, 100 சதவீதம் மாணவ-மாணவிகள் காலை உணவை உண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஈ.பி.சரவணன் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை அனுப்பி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 100 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிகளில் காலை உணவை சாப்பிட்டனர். இந்த பிரச்னைக்கும் உரிய தீர்வு காணப்பட்டது. மேற்படி பள்ளியில் அதே சமையலர்தான் பணியாற்றி வருகிறார். அவருக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. பள்ளியும் சுமூகமாக நடந்து வருகிறது. உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு, ஈ.பி.சரவணன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

The post அரசு பள்ளியில் காலை உணவு நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Chief Minister ,Vallipuram Karingarayanpalayam ,Perumanallur, Tirupur ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...