×

சேவூரில் ரூ.3.77 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

 

அவிநாசி, ஆக.29: அவிநாசி, சேவூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், மொத்தம் ரூ.3.77 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. ஏலத்தில், 13 விவசாயிகள் 129 மூட்டைகள் நிலக்கடலையை கொண்டு வந்தனர். வியாபாரிகள் 8 பேர் கலந்து கொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7800 முதல் ரூ.7850 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7700 முதல் ரூ.7800 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7600 முதல் ரூ.7650 வரையிலும் பச்சை நிலக்கடலை ரூ.500 ஏலத்தில், மொத்தம் ரூ.3.77 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. சீசன் இல்லாததால் நிலக்கடலை வரத்து குறைந்துள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

The post சேவூரில் ரூ.3.77 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Saveur ,Avinasi ,Groundnuts ,Saveur, Avinasi ,Dinakaran ,
× RELATED குழந்தைகளுக்கு உடல் உபாதை...