×

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் ஆதாருடன் செல்போன் எண் இணைக்க வேண்டும்

 

மதுக்கரை, ஆக.29: பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து மதுக்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 15-வது தவணை தொகையை தொடர்ந்து பெற அனைத்து விவசாயிகளும் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்களின் செல்போன் நெம்பரை PM KISAN e-kyc என்கிற செயலி மூலம் இணைக்க வேண்டும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் ஆண்டு தோறும் ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மதுக்கரை வட்டாரத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஆதார் என்னுடன் செல்போன் நெம்பரை இணைக்காத விவசாயிகளை மதுக்கரை வட்டார வேளாண் அலுவலர்கள் தொடர்பு கொண்டு PM KISAN e-kyc செயலி மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உதவி இயக்குநர் ரத்தினம் கூறியுள்ளார்.

The post பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் ஆதாருடன் செல்போன் எண் இணைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Madhukarai ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம்...