×

வாங்கல் அருகே கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

 

கரூர், ஆக. 29: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே மோட்டார் பழுது நீக்கும் பணியை மேற்கொண்ட கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (68). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 27ம்தேதி தண்ணீர் பிடிக்கும் வகையில் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, மோட்டார் செயல்படவில்லை.

இதன் காரணமாக, வயரில் ஏதாவது பிரச்னை உள்ளதா? என வயரை தொட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி எறியப்பட்டார். ஆபத்தான நிலையில், கருர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாங்கல் அருகே கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Wangal ,Karur ,Wangal, Karur district ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...