×

பெண் பத்திரிகையாளர் தூக்கிட்டு தற்கொலை

அண்ணாநகர்: கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகா (28). இவர் அமைந்தகரையில் வாடகை வீட்டில் தங்கி, சென்னையில் உள்ள ஆங்கில பத்திரிக்கையில் எடிட்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு தனது தாயின் செல்போனுக்கு, உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா என குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தார். இதனை நேற்று காலை பார்த்த அவரது தாயார் தனது மகளுக்கு போன் செய்தார். நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தாயார் எதிர் வீட்டில் உள்ள மனோகரன் என்பவரை தொடர்பு கொண்டு, எனது மகள் போன் எடுக்கவில்லை என்ன வென்று பார்க்கும் படி கூறினார்.

அவர் சென்று, வேகு நேரமாக கதவை தட்டியும் சினேகா கதவை திறக்கவில்லை. இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் சினேகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மன அழுத்தத்தில் இருந்த சினேகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

The post பெண் பத்திரிகையாளர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Sneha ,Coimbatore district ,Nadalkarai ,Chennai ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது