×

செங்கல்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (48) இவர் சித்த மருத்துவம் பயிற்சி அளித்து வருகின்றார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாமியார் ஊரான ஆந்திராவிற்க்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 2 சவரன், 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்துள்ளது.

புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புகழ், உதவி ஆய்வாளர் சதாசிவம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் நகை திருடி சென்ற மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.இதுதொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Thimmavaram Bharathiar ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!