×

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு போலீஸ் வலை

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (46, பெயர் மாற்றப்பட்டுள்ளது), வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது சென்னைக்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில், 14 வயதுடைய மகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சிறுமி சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து தாய் கேட்டபோது, தந்தை சார்லஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதேபோன்று 2 முறை தவறாக நடந்துகொண்ட அவர், இதுகுறித்து அம்மாவிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார் என தாயிடம் சிறுமி கூறினாள்.

அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியிடம் விசாரணை நடத்தி, சார்லஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

The post மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Kasimet ,
× RELATED பூக்கடை பகுதியில் பரபரப்பு...