×

ஓணம் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக பொது செயலாளர்): ஓணம் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள். கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.ராமதாஸ்(பாமக நிறுவனர்): ஓணம் திருநாளை கொண்டாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும். ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): தமிழ்நாட்டில் வாழும் மலையாளம் மொழி பேசும் மக்களுக்கும் மற்றும் கேரளா மாநிலத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று வாழ வேண்டும்.

அன்புமணி (பாமக தலைவர்): திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post ஓணம் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Oanam Festive ,Chennai ,Oonam ,Edapadi K. Palanisamy ,General Secretary ,Oonam Festive ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...