×

தூக்குப் போட்டு முதியவர் சாவு: விரக்தியில் கள்ளக்காதலியும் தற்கொலை

பூந்தமல்லி: கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காட்டை அடுத்த கீழ் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(50). சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி கவிதா(45). குடிப்பழக்கம் உடைய மகேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மிகுந்த மன உளைச்சலில் இருந்த மகேஷ் வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவின் பின் பகுதியிலிருந்த இரும்பு கம்பியில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மதுரவாயல் அடுத்த நூம்பல், ராஜூவ் நகரை சேர்ந்த மாலதி(44), என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் திருவேற்காட்டில் தற்கொலை செய்து கொண்ட மகேஷுக்கும், மாலதிக்கும் இடையே, கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகவும், மாலதிக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, இங்கு வசித்து கொண்டு மகேசுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஷ் தற்கொலை செய்து கொண்டதும், இதனால், விரக்தியில் மாலதியும் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கள்ளக்காதலன் இறந்த தகவல் அறிந்ததும், கள்ளக்காதலியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post தூக்குப் போட்டு முதியவர் சாவு: விரக்தியில் கள்ளக்காதலியும் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Ayanambakkam ,Thiruvekkad ,
× RELATED திருவேற்காட்டில் கூவம்...