×

சாகர் மாலா திட்டத்தை ஒருங்கிணைக்க மாநில அளவில் 5 பேர் குழு: பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: சாகர் மாலா திட்டத்தை ஒருங்கிணைக்க மாநில அளவில் தலைவர், பொறுப்பாளர்களை பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் சாகர் மாலா திட்டத்தினை ஒருங்கிணைக்க பாஜ மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. பொறுப்பாளர்களாக மீனவர் அணி தலைவர் எம்.சி.முனுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.முரளிதரன், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் சதீஷ் ராஜா, மகளிர் அணி மாநில பொது செயலாளர் கே.நெல்லையம்மாள் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சாகர் மாலா திட்டத்தை ஒருங்கிணைக்க மாநில அளவில் 5 பேர் குழு: பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sagar Mala ,BJP ,president ,Annamalai ,CHENNAI ,Sagar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்