×

அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த நபரிடம் ‘அபேஸ்’

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தனபாலன் (63). ஜவுளி வியாபாரி. கடந்த 9ம் தேதி பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை அருப்புக்கோட்டைக்கு பாதயாத்திரை வந்த போது தனபாலன் தனது கடை வாசலில் வைத்து அவருக்கு சால்வை அணிவிக்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தனபாலனை தள்ளிக் கொண்டே வந்தனர். பின்னர் கடைக்கு வந்து பார்த்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் திருடு போயிருந்தது.

The post அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த நபரிடம் ‘அபேஸ்’ appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Aruppukkottai ,Dhanapalan ,Aruppukkottai South Street, Virudhunagar district ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...