×

மாநில அரசு நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 5 பேர் கைது

லக்னோ: உத்தரபிரதேச மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வு ஆணையம், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிகளுக்கான முதன்மை தேர்வை லக்னோ, ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 78 மையங்களில் நடத்தியது. இந்நிலையில் மேற்கண்ட தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜான்பூரைச் சேர்ந்த சிவம் குப்தா, பதோஹியைச் சேர்ந்த சிவ நாராயண் மவுரியா, கோடெர்மா மாவட்டத்தைச் சேர்ந்த தீரஜ் குமார் சர்மா, கோரக்பூரைச் சேர்ந்த கமலேஷ் நிஷாத், லக்னோவைச் சேர்ந்த அகிலேஷ் சிங் ஆகிய 5 ேபரை மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் அதிரடிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாநில அரசு நடத்திய தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : government ,Lucknow ,Uttar Pradesh State Government Jobs Selection Commission ,Lucknow, Agra ,state government ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ