×

சென்னை, இராயபுரம் அருகே சாலைவிபத்தில் காயமடைந்த லலிதாவுக்கு மருத்துவச் செலவிற்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: சென்னை, இராயபுரம் அருகே சாலைவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சென்னை வடமண்டல குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா அவர்களின் மருத்துவச் செலவிற்கு நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 9-8-2023 அன்று இராயபுரம் NRT மேம்பாலத்தில் நிகழ்ந்த சாலைவிபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சமூக ஆர்வலரும், சென்னை வடமண்டல குழந்தைகள் நலக்குழு உறுப்பினருமான லலிதா அவர்களின் குடும்பத்தினர் மருத்துவச் செலவிற்கு போதுமான நிதியின்றி பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும் அவருக்கு நிதியுதிவி வழங்கக் கோரியும் கோரிக்கை வரப்பெற்றுள்ளது.

வழக்கறிஞர் லலிதா அவர்கள் குழந்தைகள் நலக்குழு உறுப்பினராகவும், ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை உதவிகளை அளித்தும் மக்கள் பணியாற்றி வருகிறார். அவருடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியில் ஊக்கத்துடன் செயலாற்றவும், அவரது மருத்துவச் செலவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்திரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை, இராயபுரம் அருகே சாலைவிபத்தில் காயமடைந்த லலிதாவுக்கு மருத்துவச் செலவிற்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Lalidah ,Chennai, Iraipuram ,Chief Minister ,MJ G.K. stalin ,Chennai ,Chennai Northmastal Children's Welfare Groups ,Lalita ,Iraipuram, Chennai ,Chennai, Iraipura ,B.C. G.K. Stalin ,
× RELATED மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில்...