×

பழவத்தான் கட்டளை ஊராட்சியில் திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

 

கும்பகோணம், ஆக. 28: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட, வளர்ச்சிப்பணிகளை ஊரக வளர்ச்சித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் கவிதா ஆய்வு செய்தார்.
அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவத்தான்கட்டளை ஊராட்சியில் தூய்மை காவலர்கள் பணி குறித்தும், குப்பை வண்டி இயக்குவது பற்றியும் குறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி, உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சிவக்குமார், சிவப்பிரகாசம், திருவிடைமருதூர் பொறியாளர் திருநாவுக்கரசு, வட்டார ஒருங்கிணைப்பாளர் துரை.கார்த்திகேயன், ஊராட்சி செயலர் மோகன்தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post பழவத்தான் கட்டளை ஊராட்சியில் திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rural Development Department ,Pahwathan ,Kumbakonam ,Papanasam ,Tiruvidaimarudur ,Tiruppanandal ,Thanjavur district ,Palavathan ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் அருகே மூங்கில்...