×

பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை

பட்டிவீரன்பட்டி, ஆக. 28: பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் ஆவணி மாதத்தில் மூலம் நட்சத்திர நாளன்று திருவிளையாடலில் வரும் நிகழ்வான சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் பிட்டுக்கு சிவபெருமான் மண்சுமந்த நாளான நேற்று சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து உற்சவரான சிவபெருமான் கையில் தங்க மண்வெட்டி மற்றும் தங்க கூடையில் மண் சுமந்தபடி கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக பிட்டு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

The post பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti Jyothilingeswarar temple ,Pattiveeranpatti ,Avani ,Thiruvilayadal ,Dinakaran ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...