×

விக்கிரமங்கலம் அருகே டூவீலர் விபத்தில் கணவர் கண் முன் மனைவி பலி

சோழவந்தான், ஆக. 28: விக்கிரமங்கலம் அருகே டூவீலரில் கணவருடன் வந்தவர் மீது பின்னால் வந்த டூவீலர் மோதிய விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். சோழவந்தான் அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை(65). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவரும் நேற்று நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டு மாலை டூவீலரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். வழியில் விக்கிரமங்கலம் அருகே வந்த போது, பின்னால் மற்றொரு டூவீலரில் இருவர் அதி வேகமாக வந்து இவர்களின் வாகனம் மீது மோதியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த வனிதா(59) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த செல்லத்துரை சோழவந்தான் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னால் டூவீலரில் வந்து மோதி விபத்தை ஏற்படுத்திய கவுல்பட்டி ராமன்(29), எரவார்பட்டி சரவணன் (30) ஆகியோர் லோசான காயத்துடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்கிரமங்கலம் எஸ்.ஐ முருகேசன், வனிதாவின் உடலை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். சாலை விபத்தில் கணவர் கண் முன் மனைவி இறந்த சம்பவம் எம்.புதுப்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post விக்கிரமங்கலம் அருகே டூவீலர் விபத்தில் கணவர் கண் முன் மனைவி பலி appeared first on Dinakaran.

Tags : Vikramangalam ,Cholawandan ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை