×

போதையில் கிணற்றில் குதித்த வாலிபர் சாவு

 

தர்மபுரி, ஆக.28: பாப்பாரப்பட்டி அருகே கே.செட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராமன்(29). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், இரண்டரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததால், அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், போதையில் வீட்டிற்கு வந்த ராமன், திடீரென அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். அதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் சென்று, ராமன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போதையில் கிணற்றில் குதித்த வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Palani ,K. Chettyalli ,Paparapatti ,Raman ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...