×

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படை தலைவன் பலியானதை உறுதி செய்தது ரஷ்யா

மாஸ்கோ: வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் தான் உயிரிழந்தார் என்பதை ரஷ்ய புலனாய்வு அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.ரஷ்ய அதிபர் புதினின் வலதுகரமாக வாக்னர் கூலிப்படை செயல்பட்டு வந்தது. உக்ரைனுக்கு எதிரான போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்ற வாக்னர் கூலிப்படை முக்கிய பங்கு வகித்தது. ரஷ்ய அதிபர் புடினுக்கு வலது கரமாக செயல்பட்டு வந்த வாக்னர் கூலிப்படையின் தலைவர் திடீரென்று புடினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஆயுத கிளர்ச்சி பெலாரஸ் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை(ஆக.23) மாஸ்கோவில் நடந்த விமான விபத்தில் பிரிகோஜின் உட்பட 10 பேர் பலியானதாக செய்திகள் வௌியாகின. இந்நிலையில் விமான விபத்தில் பிரிகோஜின் உள்பட வாக்னர் குழுவினர் 10 பேரும் உயிரிழந்ததை ரஷ்ய புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தி உள்ளது. தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பட்டியலில் பிரிகோஜின் பெயரும் உள்ளது. அனைவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரஷ்ய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

The post விமான விபத்தில் வாக்னர் கூலிப்படை தலைவன் பலியானதை உறுதி செய்தது ரஷ்யா appeared first on Dinakaran.

Tags : Russia ,Wagner ,Moscow ,Prigozhin ,Russia… ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...