×

பைக்குகள் மோதல் தாய், மகன் உட்பட 3 பேர் பரிதாப பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியை சேர்ந்தவர் சங்கரி(45). இவர் மகன் ஆனந்தராஜுடன்(25) பைக்கில் நேற்று விருதுநகர் சென்று கொண்டிருந்தார்.
116 காலனி அருகில் சென்றபோது எதிரே வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கரி, ஆனந்தராஜ், எதிரே பைக்கில் வந்த விருதுநகர் அருகே பாலவநத்தத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரஞ்சித்குமாருடன் வந்த அழகுமணி(18) படுகாயமடைந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக்குகள் மோதல் தாய், மகன் உட்பட 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sankari ,Katankudi ,Virudhunagar District, Arapukkota ,Virutunagar ,Anandraj ,Thai ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...