×

ஓவியங்களை பார்வையிடும் கலெக்டர் திருச்சியில் கவர்னரிடம் மனு அளிக்கச் சென்ற விவசாய சங்க நிர்வாகி கைது

திருச்சி, ஆக.27: திருச்சியில் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது கவர்னரிடம் மனு அளிக்க சென்ற விவசாய சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் போதாவூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு நேற்று விவசாயிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்காக நேற்று காலை கவர்னர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் வரவேற்றனர். மாலை 3.30 மணியளவில் நடைபெற இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு 44 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து மாவட்டத்தில் உள்ள முக்கிய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு அழைப்போ, தகவலோ அளிக்கப்படவில்லை. மேலும் பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகங்களுக்கும்் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் அறிந்த போதாவூர் அருகேயுள்ள சோமரசம் பேட்டையை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னதுரை முன்னதாகவே கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் கவர்னரிடம் காவிரி நீர் பெறுவது தொடர்பான கோரிக்கை மனு அளிக்க அனுமதி பெற்றிருந்தார். நேற்று காலை கோரிக்கை மனுவுடன் வீட்டிலிருந்து சங்க உறுப்பினர் கண்ணன் என்பவருடன் புறப்பட்டுள்ளார்.

மெயின் சாலைக்கு வந்த அவரை அங்கு காத்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்து சோமரசம் பேட்டை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது சின்னதுரை கவர்னரிடம் கோரிக்கை மனு கொடுப்பது குற்றமா, நான் திருமண மண்டபத்துக்கு விருந்து சாப்பிட வரவில்லை. என்னை மனு அளிக்க அனுமதியுங்கள் அல்லது கோர்ட்டில் ஆஜர்படுத்துங்கள் எனக்கூறி போலீஸ் ஜீப்பிலேயே அமர்ந்து கொண்டார். இது குறித்த தகவல் வாழை ஆராய்ச்சி மையத்தில் மனு அளிக்க காத்திருந்த மற்ற விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஓவியங்களை பார்வையிடும் கலெக்டர் திருச்சியில் கவர்னரிடம் மனு அளிக்கச் சென்ற விவசாய சங்க நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy, Tamil Nadu ,Governor ,R.N. Ravi ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்