×

திண்டுக்கல் பெயின்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல், ஆக. 27: திண்டுக்கல் அருகே உள்ள நடுமாலப்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (29). பெயின்டர். இவர் கடந்த ஜூலை 23ம் தேதி அவரது வீட்டில் ஒரு கும்பலால் வெட்டி, கொலை செய்யப்பட்டார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் பொன்மாந்துறை புதுப்பட்டி அருகே நல்லேந்திரபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்னி வேனில் வந்தவரை மடக்கி விசாரணை நடத்தினர்.இதில், அவர் சின்ன பொன்மாந்துறையைச் சேர்ந்த மாசாணம் (37) என்பதும், முனீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாசாணத்தை போலீசார் கைது செய்தனர்.

The post திண்டுக்கல் பெயின்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Muneeswaran ,Nadumalapatti ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...