×

உத்திரகோசமங்கையில் வடமாடு மஞ்சு விரட்டு

கீழக்கரை, ஆக.27: உத்திரகோசமங்கையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருப்புல்லாணி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ துவங்கி வைத்தார். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம், மதுரை, அலங்காநல்லூர், அரிட்டாபட்டி, மேட்டுபட்டி, கருப்பாயூரணி, மேலூர், குருவித்துறை, ஆர்.எஸ்.மங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஜெயமுருகன் ஏற்பாடு செய்தார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், உத்திரகோசமங்கை ஊராட்சி தலைவர் கருங்கம்மாள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆதித்தன், கார்த்திகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உத்திரகோசமங்கையில் வடமாடு மஞ்சு விரட்டு appeared first on Dinakaran.

Tags : Vadadu Manju Vrattu ,Utrakosamangai ,Keezakarai ,Vadamadu Manchu Vrattu ,Uthirakosamangai ,Thirupullani Union Udayanidhi Stalin Charitable Foundation ,
× RELATED கீழக்கரை நகர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை