×

நர்சிங் கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது

ஜெயங்கொண்டம், ஆக.27:ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் அடுத்த சவுர்வெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் குமரேசன் (29) அதே ஊரில் உள்ள பெண்ணுடன் இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குமரேசன் 18 வயது உடைய நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக அவரது தாய், தந்தையர் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதை நீ வெளியே சொன்னால் உனது தாய் தந்தையரை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும்போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது, இது குறித்து மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து குமரேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.

The post நர்சிங் கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Ramakrishnan ,Kumaresan ,Sauerpeli ,Antimadam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...