×

மடகாஸ்கர் மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலி

அன்டானாநரிவோ: மடாகஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டானாநரிவோ மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலியாகினர். மடாகஸ்கர் நாட்டில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் தலைநகர் அன்டானநரிவோவில் உள்ள மஹாமசினா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post மடகாஸ்கர் மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Madagascar ,Antananarivo ,Madagascar stadium ,Dinakaran ,
× RELATED மடகாஸ்கரில் விளையாட்டு போட்டி தொடக்க...