சென்னை: திருநின்றவூர் – தாமரைப்பாக்கம் இடையேயான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை வெளிவட்ட சாலையாக அகலப்படுத்தப்படுகிறது. அதன்படி, இரு வழிச்சாலையாக இருக்க கூடிய இந்த சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.அதாவது, 14 மீட்டரில் இருந்து 15 மீட்டர் வரை அகலப்படுத்த இந்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பாக்கம் புதுகாலனி பகுதியில் 50 முதல் 60 வருடங்கள் பழமையான 374 மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
The post திருநின்றவூர் – தாமரைப்பாக்கம் 4 வழிச்சாலை பணி மும்முரம் appeared first on Dinakaran.