×

சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில் இந்தியா ஆதித்யா விண்கலத்தை செப். 2ல் விண்ணில் ஏவ திட்டம்: இஸ்ரோ தகவல்

சென்னை: சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில், செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திராயன்-3 திட்டம் ஒரு பக்கம் வெற்றி பெற்றுள்ள நிலையில், சந்திரனுக்கு அடுத்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சூரியனை ஆராய ஆதித்யா எல்1 என்ற விண்கலனை வெற்றிகரமாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரோனா மற்றும் சூரியனின் முதல் 3 அடுக்குகளை ஆய்வு செய்வது ஆகும். இந்த பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவங்கியது. தற்போது ஆதித்யா எல்1 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சில நாளில் விண்கலம் ராக்கெட்டில் பொருத்தப்படும். அதன் பின் செப். 2ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் ‘ஹாலோ ஆர்பிட்’ எனப்படும் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த விண்கலம் 120 நாட்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இது சுமார் 1500 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் மொத்தம் ஏழு பே லோட் கலன்கள் உள்ளன. விஎல்சி, எஸ்யுஐடி, ஏஎஸ்பிஇஎக்ஸ், பாபா, எஸ்ஓஎல்இஎக்எஸ், ஹெச்இஎல்ஒன்ஓஎஸ், மேக்னட் மீட்டர் ஆகிய கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை சூரியனின் வெளிப்புற பகுதியான கொரோனா, சோலார் எமிஷன் சூரியனிலிருந்து வரும் வெளிச்சம் குறித்து ஆய்வுகளை ஆதித்யா எல்1 விண்கலம் மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

The post சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில் இந்தியா ஆதித்யா விண்கலத்தை செப். 2ல் விண்ணில் ஏவ திட்டம்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,ISRO ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...