×

கடற்கரையில் ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்: வேதாரண்யம் அருகே பரபரப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கடற்கரையில் இன்று 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. சுங்கத்துறையினர் அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரை அருகே நான்கரை கி.மீ., தூரத்தில் இன்று காலை 6 மணிக்கு கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கி கிடந்தது. கடலில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் இதைப்பார்த்து கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோடியக்கரை சுங்கத்துறையினர் சென்று பார்வையிட்டனர். அப்போது பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்டு 20 பிளாஸ்டிக் கவர் பொட்டலங்களில் தலா 2 கிலோ வீதம் 40 கிலோ கஞ்சா கரை ஒதுங்கி கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை சுங்கத்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து இலங்கைக்கு கடத்தி சென்றபோது படகுகளில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் கடலில் தவறி விழுந்ததா அல்லது ரோந்து கப்பல் வந்ததால் கடத்திச்சென்றவர்கள் பயந்து கஞ்சா பொட்டலங்களை கடலில் தூக்கி வீசி விட்டு சென்றனரா, இந்த கடத்தலில் யார் ஈடுபட்டது, வேதாரண்யத்ைத சேர்ந்த யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

The post கடற்கரையில் ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்: வேதாரண்யம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vedarnaya ,Vedaranayam ,Vedaranya ,TWC ,Vadaranya ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...