×

காந்தியை கொன்றவர்கள் ஜெய்பீம் படத்துக்கு எப்படி விருது தருவார்கள்?: நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

சென்னை: தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாததற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்தது. வெளியான சமயத்தில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது அறிவிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர்களிடையே இது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

பாஜகவால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட காஷ்மீர் ஃ பைல்ஸ் படத்திற்கு விருது வழங்கியதில் ஆச்சர்யம் இல்லை எனவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதே சமயத்தில் தமிழில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாததிற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் காந்தியை கொன்றவர்கள் இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவம் தத்துவத்தை கொள்ள முயற்சிப்பவர்கள் ஜெய் பீம் படத்திற்கு எப்படி விருது தருவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

The post காந்தியை கொன்றவர்கள் ஜெய்பீம் படத்துக்கு எப்படி விருது தருவார்கள்?: நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Jaipeem ,Prakashraj ,chennai ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!