×

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க வருகை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு

கீழ்வேளூர், ஆக.26: திருக்குவளையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. தொடக்க விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாங்கண்ணியில் இருந்து திருக்குவளை சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்கள், தொண்டர்கள் நின்று வரவேற்பு அளித்தனர்.

முதல்வருக்கு கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மேலப்பிடாகையில் மாவட்ட திமுக செயலாளரும், மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் அறிவுறுத்தலின்படி ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பில் மாவட்ட பிரதிநிதிகள் ஞானசேகரன், இளம்பரிதி, வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரியசார்லஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, வழக்கறிஞர் அணி பூவைமுருகு, நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பரமணியன், துணை செயலார்கள் அருள்செந்தில், ஜோதிபாசு, இளைஞர் அணி புகழேந்தி, நிக்சன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் ஒன்றிய, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க வருகை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Kilivelur ,M.K.Stalin ,Thirukkuvali ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...