×

வேலம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி

 

திருப்பூர், ஆக.26: 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘சுதந்திர இந்தியாவில் இன்றைய பெண்களில் நிலை’ என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நேற்று நடைபெற்றது. 8ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் ஆவர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கனிமொழி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சேவ் அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் பாலின அடிப்படையிலான பாகுபாடு என்றால் என்ன, குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண், பெண் என்று பாகுபாடின்றி தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்து எடுத்துரைத்தார். நிறைவில் சேவ் கள ஒருங்கிணைப்பாளர் நாகராசன் நன்றியுரை கூறினார்.

The post வேலம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Velampalayam Govt. ,Tirupur ,Velampalayam Government High School ,Velampalayam Government School ,Essay ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...