×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

 

ஈரோடு,ஆக.26: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஈரோடு அடுத்துள்ள பி.பெ. அக்ரஹாரம், அண்ணாநகர், முத்துவீதியை சேர்ந்தவர் சிராஜ்தீன்(54). இவர் கிரைண்டர் ரிப்பேர் செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு 11 வயது சிறுமியை தனது கடைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் வீட்டிற்கு அழைத்து சென்றும் பல முறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிராஜ்தீனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு மீதான தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சீராஜ்தீனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குறைஞர் ஜெயந்தி ஆஜரானார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Mahila Court ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...