×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 ஆயிரம் லாரிகள் அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை போயுள்ளன: நீதிபதிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 ஆயிரம் லாரிகள் அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை போயுள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவில் கனிம வளம் எடுக்கப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதில்லை என்று கோர்ட் கூறியுள்ளது. கனிமவளம் கொள்ளை போவதை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை என்ன செய்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புகாருக்குள்ளான கிராம நிர்வாக அலுவலர்மீது நீதிமன்றம் கூறியபடி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 ஆயிரம் லாரிகள் அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை போயுள்ளன: நீதிபதிகள் appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,Pudukottai district.… ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...