×

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டை உடைத்து நகை பணம் திருடியவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லப்பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜாமணி (40). இவர், ஸ்ரீபெரும்புதூர் டவுனில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த 8ம் தேதி ராஜாமணியின் வீடு பூட்டப்பட்டு, யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். பின்னர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து 25 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.20 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

இப்புகாரின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ராஜாமணி வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர், சென்னை போரூர் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (30) எனத் தெரியவந்தது.

அவரை நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ராஜாமணி வீட்டில் கொள்ளையடித்த நகைகளை தனது வீட்டில் உள்ள மின்சார அடுப்பில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்து 25 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட பிரேம்குமாரிடம் விசாரித்ததில், அவர் பகல் நேரங்களில் சென்னையில் ஒரு பிரபல தனியார் செல்போன் விற்பனை கடையில் உதவி மேலாளராக வேலைபார்த்தபடி, இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் பகுதி நேரமாக செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. பின்னர் பிரேம்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டை உடைத்து நகை பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriepruthur ,Rajamani ,Sriperudur ,Sriperuthur Town ,Sripurudur ,Dinakaran ,
× RELATED மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது