×

வாட்ஸ் அப் சேட்டிங்கில் கவர்ச்சி மெசேஜ் பயிற்சி போதகரிடம் பணம் பறிப்பு: 2 இளசுகள் அதிரடி கைது

அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் குளத்துவிளையில் வசிப்பவர் பவுல் ராஜ் (27). நாகர்கோவிலில் உள்ள இறையியல் கல்லூரி ஒன்றில் போதகர் பயிற்சி 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 15ம்தேதி பவுல் ராஜின் வாட்ஸ் அப்பிற்கு ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி ஒன்று வந்து உள்ளது. இதைக்கண்டதும் தனது நண்பர்கள் என்று நினைத்த பவுல்ராஜ், மெசேஜுக்கு பதில் அனுப்பியுள்ளார். இப்படியே பலமுறை சேட்டிங் நடந்துள்ளது.

இந்தநிலையில் உங்களை நான் நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் எனவும், கவர்ச்சி தரும் வகையிலும் மெசேஜ் வந்து உள்ளது. இதை கண்ட பவுல் ராஜ், தனது நண்பர்கள் தான் இப்படி விளையாடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு சரி, வருகிறேன்… எங்கே வரவேண்டும் என்று மெசேஜ் அனுப்பினார். இதையடுத்து அந்த நபர் ரகசிய இடத்தை கூறி அந்த பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். சம்பவத்தன்று பவுல்ராஜும், அந்த நபர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 4 வாலிபர்கள் பவுல் ராஜை சுற்றி வளைத்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல் பவுல் ராஜிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 800 பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். பிறகு இங்கு நடந்ததை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதுகுறித்து பவுல்ராஜ் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பவுல்ராஜிடம் பணம் பறித்தது மயிலாடி புதூரை சேர்ந்த ரஞ்சித் குமார் (20), அஜய் (20), பெருமாள் சுனில் (19), பிரதீஷ் (21) என்பது தெரியவந்தது. அவர்களில் ரஞ்சித் குமார் மற்றும் அஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

The post வாட்ஸ் அப் சேட்டிங்கில் கவர்ச்சி மெசேஜ் பயிற்சி போதகரிடம் பணம் பறிப்பு: 2 இளசுகள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Anju Village ,Paul Raj ,Kulathuvilai, Tengambudur, Kanyakumari district ,Nagercoil ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது