- முத்துமாரியம்மன்
- கோவில்
- கும்பாபிஷேக் விழா
- சாயல்குடி
- Kumbabhishekam
- முத்து மரியம்மன் கோயில்
- முதுகுளத்தூர்
- கீரத்திருக்கை கிராமம்
- கண்மாய்க்கரை…
- முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சாயல்குடி, ஆக.25: முதுகுளத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கிராத்திருக்கை கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் மற்றும் கண்மாய்கரையில் உள்ள முத்துமாரியம்மன், விநாயகர் மற்றும் பரிவார கிராம தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதுபோன்று மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கண்மாய் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வருண யாகம் நடத்தப்பட்டது.
திங்கள் முதல் நேற்று வரை 3 நாட்கள் முதல்காலம் முதல் ஆறு கால பூஜைகள் வரை நடத்தப்பட்டு நேற்று காலையில் யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
The post முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.