×

சாத்தான்குளம் அருகே கொடைவிழா மோதலில் இருவர் மீது தாக்குதல்

சாத்தான்குளம், ஆக. 25: ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் அன்னமகாராஜா (23). இவர், சொந்த ஊரான சாத்தான்குளம் அருகே கீழபுளியங்குளம் சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழாவிற்கு கடந்த 17ம் தேதி வந்துள்ளார். அவரது உறவினர் திரவியம் மகன் சக்திவேல் (40) என்பவர் கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்துள்ளார். அப்போது இளமால்குளம் சுப்பிரமணியன் மகன் முருகன் (41) என்பவர் வழிமறித்து அன்னமகாராஜாவை அவதூறாக பேசியுள்ளார். அவர் தீர்த்தம் கோயிலில் இறங்கியதும் பேசி கொள்ளலாம் என கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் முருகன், ஐயம்பெருமாள் மகன் பாலசுப்பிரமணி, நெல்லை தச்சநல்லூர் துரை மகன் சுந்தர் சிங், புளியங்குளம் ராமசாமி மகன் கோவிந்தராஜ், புளியங்குளம் கணபதி மகன் அன்னபழம் (41) ஆகியோர் சேர்ந்து சக்திவேல் மற்றும் அன்னமகாராஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த இருவருக்கும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி தரப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அன்னமகாராஜா சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிந்து முருகன், அன்னபழத்தை கைது செய்தார். மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்.

The post சாத்தான்குளம் அருகே கொடைவிழா மோதலில் இருவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kodaiviza ,Satankulam ,Satanakulam ,Annamakaraja ,Rajkumar ,Navalachumipuram ,Alwarthinagari ,Shathankulam ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்