×

720 தெருக்களின் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் அடிக்கடி கழிவுநீர் தடைபட்டு செல்லும் தெருக்களில் உள்ள கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றிட தூர்வாரும் பணிகள் வரும் இன்று முதல் செப்டம்பர் 2ம்தேதி வரை மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக, 720 தெருக்களில் அமைந்துள்ள 5,277 இயந்திர நுழைவாயில்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 142 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 35 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 60 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 537 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் மூலம் கழிவுநீர் தடைபட்டு செல்லும் குழாய்களில் கசடு நீக்கப்பட்டு கழிவுநீர் கட்டமைப்பு திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 720 தெருக்களின் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Drinking Water Board ,North-East Monsoon ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...