×

நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு நம்பிக்கை உள்ளது; வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள திமுக அமைச்சர்கள் தயார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு நம்பிக்கை உள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கீழமை நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்டவர்கள் மீது ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். அதிமுக ஆட்சியில் ஏராளமானோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி நல்ல தீர்ப்பை பெற்றுள்ளோம் என்று கூறினார்.

The post நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு நம்பிக்கை உள்ளது; வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள திமுக அமைச்சர்கள் தயார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Divagu ,Ganagar ,R.R. S.S. Bharati ,Chennai ,Dhagu ,Dizhagam Organisation ,Anna ,Nawalayam ,Tonga ,Ganjam ,
× RELATED அண்ணா மட்டும் பிறக்காமல்...