×

வைரலோ வைரல்: நாயாக மாறிய மனிதர்!

நாயாக மாறிய மனிதர்!

ஜப்பானில் டோகோ என்பவர் தனது நீண்ட நாள் கனவை நினைவாக்கியிருக்கிறார். அதாவது அச்சு அசலாக ஒரு நாயைப் போல் மாற வேண்டும் என்பதுதான் அவரின் கனவாம். இதற்காக அவர் சுமார் 20,000 டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் 16.5 கோடியை இழந்திருக்கிறார்.

அச்சு அசலாக நாயின் உடல், தோல், கால்கள், நகங்கள் என இந்த உடையை உருவாக்கி அதனுள் தன்னைப் பொருத்திக்கொண்டு எங்கு பார்த்தாலும் நாயைப் போல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அடகடவுளே ஒரு மாறுவேஷம் போட இவ்வளவு செலவா, காஸ்ட்லி ஃபேன்சி டிரெஸ் போட்டி, இப்படி பலரும் டோகோவின் இந்த செயலுக்கு விமர்சனங்களையும், கருத்துகளையும் கொடுத்து வருகிறார்கள். எனினும் டோகோ இப்போது எங்கும் எதிலும் வைரலாகிவருகிறார்.

இந்த மாதிரி ஒட்டிக்கோங்க!

பெருகி வரும் டிஜிட்டல் உலகம் இனி ஒவ்வொரு மனிதனையும் விஐபிகளாகவும், மாடல்களாகவும் மாற்றிவருகிறது. இணையதள இன்ஃப்ளுயன்சர்கள் எங்கும் டிரெண்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்க, ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குழந்தைகளுக்கு கலகலப்பாக இலக்கணம், ஆங்கிலம் கற்பிப்பது, கைவினைப் பொருட்களை அவர்களைக் கொண்டே உருவாக்கி அவைகளை இன்ஸ்டாவில் பதிவிடுவது, மற்றும் பாடங்களில் வரும் கதைகளை நாடகங்களாக அமைப்பது என பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அதில் சிறுவன் சிவபாண்டியின் மழலையான பேச்சும், முகமும் என சிவபாண்டிக்கு தனியாக ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.

The post வைரலோ வைரல்: நாயாக மாறிய மனிதர்! appeared first on Dinakaran.

Tags : Togo ,Japan ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...